பக்தியின் இலட்சணம்! ராகு கோவிலில் ‘பிளாக்கில்’ தரிசன டிக்கெட் விற்பனை?

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தஞ்சாவூர்,மார்ச்9- திருநாகேசுவரம் ராகு கோவிலில், பரிகாரம் செய்ய வருபவர்களிடம், தரிசன டிக்கெட் விலையை விட, அதிக தொகைக்கு டிக்கெட் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில், கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் முருகேசன் என்பவரிடம், கோவிலில் பணிபுரியும் ஜெயசந்திரன், 500 ரூபாய் வீதம் மூன்று பேருக்கு, 1,500 ரூபாயை வசூல் செய்தார். அதுபோல, ஒவ்வொரு முறையும், ஜெயசந்திரன் அதிக பணம் வசூல் செய்தார். இதையறிந்த முருகேசன், கடந்த முறை கோவிலுக்கு வந்த போது, காட்சிப் பதிவு எடுத்து வெளியிட்டார்.  இது தொடர்பாக,  சென்னையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதர னிடம் புகார் மனு அளிக்கப்பட்டதாம்!

மனுவில்  கூறியுள்ளதாவது: டிக்கெட் விலை, 100 ரூபாய் என்ற போதிலும், 500 ரூபாய் பெற்று, கோவில் ஊழியர் ஜெயசந்திரன், முறையான ரசீது கொடுக்காமல் இருந்துள்ளார். கோவிலுக்கு வரும் வருமானத்தை, ஜெயசந்திரனே எடுத்துக் கொண்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம், ராகு கால சிறப்பு பூஜை நேரத்தில், ஜெயசந்திரன் கூடுதலாக பொறுப்பு பார்க்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித் துள்ளார். இணை ஆணையரிடம் ஆணை வாங்கி, தியேட் டர்களில், ‘பிளாக்கில்’ டிக்கெட் விற்பது போல, கோவில்களில் டிக்கெட் விற்றுள்ளார். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *