பி.ஜே.பி. அய்.டி. பிரிவிலிருந்து மேலும் 13 நிர்வாகிகள் விலகல்

Viduthalai
2 Min Read

சென்னை, மார்ச் 9 பா.ஜ.க.வில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவதால் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தமிழ்நாடு பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருந்து நிர்மல் குமார் மற்றும் திலிப் கண்ணன் விலகி அ.தி.மு.க. வில் இபிஎஸ் முன்னிலையில் இணைந்தனர். இதற்கு பாஜக தரப் பில் கண்டனம் தெரிவித்து, இத னால் அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே மோதல் நிலவி வருகிறது.

சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள்

இந்த நிலையில், சென்னை மேற்கு மாவட்ட பாஜக தொழில் நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கூண் டோடு அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர். பாஜகவில்  அய்.டி. பிரிவில் இருந்து மேலும் 13 பேர் விலக்கியுள்ளனர். சென்னை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஒரத்தி.அன்பரசு உள்ளிட்ட  10 செயலாளர்கள், 2 துணைத் தலை வர்கள் பாஜகவில் இருந்து  விலகியுள்ளனர்.

ஐடி விங் பிரிவு தலைவர் அறிக்கை: சென்னை மேற்கு மாவட்ட பாஜக அய்.டி. தொழில் நுட்பப் பிரிவின் தலைவர் ஒரத்தி.அன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியில் சில காலமாக அசாதாரண சூழ்நிலை நிலவி வந்த நிலையில், ஒரு சில தினங்களாக பலர் என்னை தொடர்பு கொண்டு சில விளக் கங்களை கேட்க ஒரே சமயத்தில் அழைக்க முற்படும்பொழுது சில ருக்கு விளக்கம் அளிக்க முடியாத நிலை உருவாகிறது. ஆகவே என் னுடைய நிலையை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய கடமை தற் பொழுது எனக்கு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பாஜக-வில் பயணித்துள்ளேன். அதில் கட்சி பொறுப்பு என்பது ஒருசில ஆண்டுகள்தான், பதவி என்பதை எதிர்பார்த்து பணிபுரிபவன் அல்ல என்பது என்னை சுற்றி இருப்ப வர்களுக்கு அனைவருக்கும் தெரி யும். என் பணிகளை அனைவரும் அறிவீர்கள் என்று நம்புகிறேன். இத்தனை காலம் எனக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் புகார்களை யும் எவ்வாறு நான் எதிர் கொண்டேன் என்று எண்ணி பார்க்கையில் எனக்கே வியப்பாக இருக்கிறது. தகுதியற்றவன் என்று கூறி தரம் பிரிக்கும் சுயநலக்காரர் களின் சூழ்ச்சிகளுக்கு பலியாக விரும்பவில்லை. எதிர்ப்பு சக்தி களிடம் இருந்து காத்துக் கொள் ளும் பரிகாரம் என்றே இதை செய்கிறேன். நிச்சயமாக தி.மு.க-வில் இணையமாட்டேன். திமுக-வை விமர்சிக்கவே பாஜக-வில் இருந்து விலகுகிறேன். தொடர்ந்து என் மீது அன்பு காட்டி வரும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வான நன்றிகள்.

அதிமுகவில் இணைய திட்டம்

மேலும், என்னுடன் கட்சியில் இணைந்து பணி செய்து வரும் அன்பு சகோதரர்களின் எண்ணங் களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், அவர்களது வலியுறுத்தலின் பேரி லும் எங்களின் தலைவர்  சி.டி.ஆர். நிர்மல் குமாருடன் அரசியல் பாதையில் பயணிப்பது என்று முடிவு செய்யப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார். இந்த அறிக் கையில் பாஜகவில் இருந்து விலகிய 13 பெரும் கையெழுத்து இட்டுள் ளனர். மேலும், பாஜகவில் இருந்து விலகிய 13 பேரும் நிர்மல் குமாரை பின்பற்றி அதிமுகவில் இணையப் போவதாகவும் தகவல் கூறப் படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *