தினசரி பாதிப்பு மீண்டும் 300-அய் தாண்டியது கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,076 ஆக உயர்வு

1 Min Read

அரசியல்

புதுடில்லி, மார்ச் 9 இந்தியாவில் கரோனா தொற்றால் புதிதாக 326 பேர் பாதிக்கப்பட் டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியுள்ளது. பாதிப்பு கடந்த 5-ஆம் தேதி 324 ஆக இருந்தது. நேற்று முன்தினம் (7.3.2023) 281, நேற்று 266 ஆக குறைந் திருந்தது. இந்நிலையில் 2 நாட்களுக்கு பிறகு பாதிப்பு இன்று மீண்டும் 300-அய் தாண்டி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட வர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 88 ஆயிரத்து 693 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று (8.3.2023) 220 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 54 ஆயிரத்து 842 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்புடன் மருத் துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரு கிறது. அந்த வகையில் தற்போதைய நில வரப்படி 3,076 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றை விட 106 அதிகமாகும். தொற்று பாதிப்பால் தொடர்ந்து 4-ஆவது நாளாக புதிய உயிரிழப்புகள் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,775 ஆக நீடிக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *