தமிழ்நாடு முதலமைச்சரின் குற்றச்சாட்டை வழிமொழிகிறார் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன்

Viduthalai
3 Min Read

அரசியல்

சென்னை, மார்ச் 9 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்ட ஈ.வெ.கி.ச. இளங்கோவன், சென்னையில் 10ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக தெரிவித்தார்.

 ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மகளிர் தினம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப் பினராகவும்,  மேனாள் ஒன்றிய இணை அமைச்சருமான ஈ.வெ.கி.ச.இளங்கோவன் இதில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் பேசுகையில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டி யிட்டு பெரிய அளவில் வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னு டைய வெற்றிக்காக பாடுபட்ட அமைச்சர்கள், நிர்வாகிகள், காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

வரும் 10-ஆம் தேதி சென்னையில் சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப் பேற்றுக் கொள்ள இருக்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் என்னிடம் நிறைய கோரிக்கைகளை வைத்துள்ளனர். அந்தக் கோரிக்கைகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவேன்.கழிவுநீர் பிரச்சினை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் நிறை வேற்ற நடவடிக்கை எடுப்பேன். தமிழ் நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், `தி.மு.க. ஆட்சிக்கு எதிராக சதி நடக்கிறது’ என்று கூறியுள்ளார். அவர் கூறியிருப்பது உண்மைதான். பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் வளர முடியாது என்பதால் அவர்கள் பல் வேறு சதிகளை செய்து தி.மு.க. ஆட் சிக்கு எதிராக செயல்படுகிறார்கள். ஆட் சிக்கு நெருக்கடி கொடுத்து, இல்லாத பிரச்சினைகளை தூண்டி விட்டு புதிய பிரச்சினைகளை எழுப்பி தி.மு.க. ஆட்சிக்கு எதிராக செயல் படுவதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறார்கள்.

வட மாநிலத்தவர்கள் பாதுகாப்புடன் உள்ளனர்

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் களுக்கு எந்த ஆபத்தும் இன்றி பாதுகாப்புடன் உள்ளனர். அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் தங்கி வேலை பணி புரிவதன் மூலம் தொழில் நடத்து பவர்களுக்கு பெரும் உதவியாக உள் ளனர். தமிழ்நாட்டில் அவர்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளது. எனவே தமிழ்நாடு மக்கள் பா.ஜ.க.வின் சதியை முறியடிப்பார்கள். இதுபோன்ற பொய்யான வதந்திகளை தமிழ்நாடு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். வட மாநிலத்தவர்களுக்கு எந்தவித பாதிப் பும் இல்லை. சீமான், – அண்ணாமலை போன்றோரின் கருத்துகளை மக்கள் நம்பமாட்டார்கள். அதற்கு மக்கள் பலியாகவும் மாட்டார்கள். ஈரோடு மாவட்டத்தில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீரை கடலில் கலக்கும் திட்டம் குறித்து தமிழக அரசு ஆராய்ந்து  கொண்டு இருக்கிறது. ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலை போக்க, மேட்டூர் ரோடு வரை மேம்பாலம் அமைக்குமாறு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கனிமார்க்கெட் பகுதியில் கட்டப் பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிக வளாகத்துக்கு மிக அதிகமான வாடகை நிர்ணயம் செய்துள்ளதால் சிறு வியாபாரிகளால் அங்கு கடை எடுத்து நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, சிறு வியாபாரிகளின் வாழ் வாதாரம் பாதிக்காத வகையில், நீதி மன்ற தீர்ப்பு வந்தவுடன் ஜவுளி வியா பாரிகளின் கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும். எனது வீடு உள்பட ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏராளமான குடியிருப்புகள் பட்டா இல்லாமல் உள்ளன. மக்கள் வசிக்கும் பல்வேறு குடியிருப்புகளுக்கும் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக அமைச்சர் முத்து சாமியுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும். ஈரோடு கிழக்கு தொகுதிக் கான சட்டப்பேரவை அலுவலகம் 

ரூ. 10 லட்சம் ரூபாய் செலவில் புதுப் பிக்கப்பட உள்ளது. இந்தப் பணி நிறைவு பெற்றதும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அங்கு செயல்படத் தொடங்கும்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *