காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் ஒன்றிய அரசு முனைப்பு காட்டவில்லை அமைச்சர் துரைமுருகன் சாடல்

1 Min Read

அரசியல்

திருச்சி, மார்ச் 9- “காவிரி- — – குண் டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த, ஒன்றிய அரசு முனைப்பு காட்டவில்லை,” என, தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச் சர் துரைமுருகன் குற்றம் சாட் டினார்.

திருச்சி விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை, ஒன்றிய அரசு தான் செயல்படுத்த வேண்டும். ஆனால், அந்த திட்டத்தை செயல்படுத்து வதில், ஒன்றிய அரசு முனைப்பு காட்டவில்லை.

திடீரென கூட்டத்தை கூட்டி, அது பற்றி பேசி விட்டு, பின் மறந்து விடுவர். பல மாநிலங்கள் இணைந்து செயல்படுத்த வேண்டிய திட்டம் என்பதால், ஒன்றிய அரசு தான் பெரும் பங்காற்ற வேண்டும்.

ஒரு கட்சி, ஆட்சியில் இருக்கும் போது துவங்கும் திட்டங்களை, முடிக்கும் முன்னதாகவே, ஆட் சியை விட்டு இறங்கி விடலாம்.

அதற்காக, மக்கள் வரிப்பணத் தில் துவங்கிய திட்டத்தை, ‘மாற்று கட்சியினர் கொண்டு வந்த திட்டம்’ என்ற குறுகிய நோக்கத்துடன், அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சி, அந்த திட்டத்தை கைவிடக் கூடாது.

ஆனால், அந்த சித்து விளை யாட்டை அ.தி.மு.க.,வினர் செய் தனர். தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த தாமிரபரணி – கருமேனியாறு திட்டத்துக்கு, நிதி ஒதுக்காமல் கிடப்பில் போட்டு விட்டனர். அந்த குறுகிய நோக்கம் எங்களுக்கு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *