எல்லாம் தேர்தல் திருவிளையாடல்! கருநாடகத்தைத் தொடர்ந்து உ.பி.யிலும் குற்றவாளிகள் விடுதலை

2 Min Read

லக்னோ, மார்ச் 9 ஆயுள் தண் டனை பெற்ற  கைதிகளை விடுவிக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு செய் துள்ளது. இதற்காக, அம்மாநிலத் தின் 75 மாவட்ட சிறைகளிலும் இருப்பவர்களின் விவரங்களை கேட்டுள்ளார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன் னிட்டு உத்தரப்பிரதேச மாநில அரசு தன் சிறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. கடந்த வருடம் முதல் துவங்கிய இந்த மாற்றங்களில் புதிதாக ஒரு முடிவை பாஜக ஆளும் அரசு எடுத்துள்ளது.

எழுபதுக்கும் அதிகமான மூத்த வயது கைதிகளும் பலன் பெற உள் ளனர். இந்த இரண்டு தரப்பினரை சிறைகளில் வைத்து பராமரிப்பது உபி அரசுக்கு பெரும் சிக்கலாக உள்ளது. இந்த இரண்டு வகை கைதிகளின் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே இந்த விடுதலை வாய்ப்பு அவர்களுக்கு அளிக்கப்பட உள்ளன. இந்த முடிவில் தீவிரவாதக் குற்றங்களை செய்து ஆயுள் தண்டனை அனுப வித்து வரும் கைதிகளுக்கு பலன் கிடைக்குமா? என்பது தெரிய வில்லை.

  விவரங்களை கேட்டு, தலைமை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா உபியின் சிறைகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இவற்றை இரண்டு வாரங்களில் அனுப்பக் கோரியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதை பெற்ற பின் உபி சட்டத் துறையின் சேவை ஆணையம், அவர்களை விடுவிப்பதற்கான விதி களை தம் அரசிற்கு பரிந்துரைக்கும். இதன் மீது முதலமைச்சர் யோகி இறுதி முடிவு எடுத்து விடு தலைக்கான தேதியை அறிவிக்க உள்ளார்.

இதுபோல், உபியின் கைதி களுக்கு சாதகமான பாஜக அரசால் அளிக்கப்படுவது புதிதல்ல. தண் டனைக் காலம் முடிந்தும் அதனு டன் சேர்த்து விதிக்கப்பட்ட அப ராதத் தொகை கட்ட முடியாமலும் பல சிறைவாசிகள் உபியில் உள்ளனர். 

இவர்களுக்காகவும் ஒரு திட்டம் வகுத்து அவர்கள் விடு தலைக்கு உதவ உபி முதலமைச்சர் யோகி அறிவித்திருந்தார். கைதி களுக்கான உணவு முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு தேநீர், அனைத்து மதங்களின் விழா  காலங்களில் சிறப்பு உணவு உள் ளிட்ட வசதிகள் கூடுதலாக அறி விக்கப்பட்டன.

பெரும்பாலான சிறைக் கைதிகள் அறைகளில் அடைக் கப்படுவதும் குறைந்து வருகிறது. ஒரே குடும்பத்தின் கைதிகளை சிறைகளின் உள்ளே சந்தித்து பேச அனுமதிக்கப்படுவது உள்ளிட்ட மேலும் பல வசதிகளும் உபியில் படிப்படியாக அறிமுக மாகி வருவது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கினாலே பாஜக விற்கு சிறைக்கைதிகள் மீது பரிவு வந்துவிடுகிறது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *