பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் கலைநிகழ்ச்சியில் ஜாதி ஆணவ வன்முறை வெறியாட்டம்

1 Min Read

அரசியல்

பல்லியா, மார்ச் 9-  உத்தரப் பிரதேசத்தில் ஜாதியை போற்றும் வகையில் பாடல் பாட மறுத்த நடிகர் பவன் சிங் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போஜ்புரி நடிகர் பவன் சிங் மற்றும் பாடகி ஷில்பி ராஜ் ஆகியோர் உத்தரப்பிரதேச மாநிலம் பல்லி யாவில் நடந்த தனியார் கச்சேரியில் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் திரைப்படப் பாடல்களை சேர்ந்து பாடினர்.  கூட்டத்தில் இருந்த சிலர், குறிப் பிட்ட ஜாதியினரை போற்றும் வகையிலான பாடலை பாடுமாறு கேட்டுக் கொண்டனர். அந்த குறிப்பிட்டப் பாடலை பாட பவன் சிங் மறுத்துவிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தில் இருந்த சிலர் பவன் சிங்கை நோக்கி கற்களை வீசினர். அந்த கல் அவர் மீது பட்டதால் அவருக்கு லேசான காயம் ஏற்பட் டதாக கூறப்படுகிறது. 

திடீரென விழா மேடை வன்முறை களமாக மாறிய தால், விழா விற்கு  வந்தவர்கள் சிதறி யடித்து ஓட்டம் பிடித் தனர். அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர், மேடை யில் இருந்து பிரபலங்களை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத் தனர். இந்நிகழ்வின் காட்சிப் பதிவு சமூக வலைதள ங்களில் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *