பேராசிரியர் அருணன் கவிதை நூல் வெளியீட்டு விழா

1 Min Read

 மதுரை, மார்ச் 9-  பேராசிரியர் அருணன் எழுதியுள்ள “ஞானக் கோலங்கள் 200” கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை 10-3-2023 வெள்ளியன்று மாலை 6 மணிக்கு மதுரை கலைஞர் கருணாநிதி நகர் நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கத்தில் நடை பெறவுள்ளது. 

விழாவிற்கு தமுஎகச மாநில துணைச் செயலாளர் சிறீரசா தலைமையேற்க, மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் மீ.லெனின் வரவேற்புரையாற்றுகிறார்.  செம்மலர் ஆசிரியர் ச.தமிழ்ச்செல்வன் நூலை வெளியிட, தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் பெற்றுக்கொள்கிறார்.தமுஎகச மதிப்புறு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்க டேசன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

நூலாசிரியர் பேராசிரியர் அருணன் ஏற்புரை நிகழ்த்துகிறார். 

தமுஎகச மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அம்பிகா பழனி வேல் நன்றி கூறுகிறார்.  தமுஎகச மதுரை மாநகர்-புறநகர் மாவட்டக்குழுக்கள் விழாவை ஏற்பாடு செய்துள்ளன.ரூ.300 விலை யுள்ள நூல், விழா அரங்கில் ரூ.200-க்கு கிடைக்கும் என வசந்தம் வெளியீட்டகம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *