மறக்க முடியுமா அம்மா!

0 Min Read

அரசியல்

அன்னையார்!

எளிமையானவர்

அந்த எளிமைக்கு

வலிமை என்று பொருள்!

அடக்கமானவர்

அந்த அடக்கத்திற்கு

அரிமா என்று பொருள்!

சிக்கனமானவர்

அந்த சிக்கனத்துக்குத்

தமிழ்நாட்டின்

பொக்கிஷம் என்று பொருள்!

அன்பானவர்

அந்த அன்புக்கு

அரவணைக்கும்

தாய்மை என்று பொருள்!

பொறுமையானவர்

அந்தப் பொறுமைக்குப்

போராளி என்று பொருள்!

எரிமலையாம்

பெரியாருக்கே

இயற்கைக் காற்றாய்

வீசியவர்

என்ன குறை? 

அய்யாவை வாழ வைத்தவர்

அறுபதாண்டு முன்பே

மறைந்தாரே!

மறக்க முடியவில்லை

அம்மா!

மண்ணும் காற்றும்

மறையுமா?

நீங்களும் அப்படித்தான்

எங்கள் இதயத்தில்!

– கவிஞர் கலி.பூங்குன்றன் –

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *