மறக்க முடியுமா அம்மா!

Viduthalai
0 Min Read

அரசியல்

அன்னையார்!

எளிமையானவர்

அந்த எளிமைக்கு

வலிமை என்று பொருள்!

அடக்கமானவர்

அந்த அடக்கத்திற்கு

அரிமா என்று பொருள்!

சிக்கனமானவர்

அந்த சிக்கனத்துக்குத்

தமிழ்நாட்டின்

பொக்கிஷம் என்று பொருள்!

அன்பானவர்

அந்த அன்புக்கு

அரவணைக்கும்

தாய்மை என்று பொருள்!

பொறுமையானவர்

அந்தப் பொறுமைக்குப்

போராளி என்று பொருள்!

எரிமலையாம்

பெரியாருக்கே

இயற்கைக் காற்றாய்

வீசியவர்

என்ன குறை? 

அய்யாவை வாழ வைத்தவர்

அறுபதாண்டு முன்பே

மறைந்தாரே!

மறக்க முடியவில்லை

அம்மா!

மண்ணும் காற்றும்

மறையுமா?

நீங்களும் அப்படித்தான்

எங்கள் இதயத்தில்!

– கவிஞர் கலி.பூங்குன்றன் –

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *