உலக மகளிர் நாள்:

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இலங்கையில் இருந்து திருச்சிக்கு விமானத்தை இயக்கி வந்த பெண்கள்

அரசியல்

திருச்சி, மார்ச் 10 உலக மகளிர் தினத்தையொட்டி இலங்கையில் இருந்து திருச்சிக்கு பெண்கள் விமானத்தை இயக்கி வந்தனர். உலக மகளிர் தினத்தையொட்டி சிறீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சிக்கு பெண்களை மட்டுமே கொண்டு விமானத்தை இயக்கியது. வழக்கமாக விமானி, துணை விமானி, மேலாளர் உள்ளிட்டவர்கள் ஆண்களாக இருப்பார்கள். ஆனால் உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக நேற்று முன்தினம் (8.3.2023) பெண் விமானிகள் மூலமாக விமானத்தை அந்த நிறுவனம் இயக்கியது. விமானியாக சாமிக்க ரூபசிங்க, முதல் அதிகாரியாக பிமலி ஜீவந்தா, கேபின் முதன்மையாளராக சாமரி விஜே சூர்ய மற்றும் பணிப்பெண்கள் என மொத்தம் 8 பெண்கள் பணியாற்றினர். இந்த விமானம் காலை 9.10 மணி அளவில் திருச்சி விமானநிலையத்தில் தரையிறங்கியது. தொடர்ந்து விமானத்தில் இருந்து இறங்கிய அவர்களை அதிகாரிகள் பாராட்டினர். அதன்பின் விமான நிலைய வளாகத்தில் மகளிர் நாள் கொண்டாடப்பட்டது. விமானத்தை இயக்கிய மகளிர் குழுவினருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மீண்டும் அந்த விமானம் காலை 9.30 மணி அளவில் அதே பெண்கள் குழுவினருடன் இலங்கை தலைநகர் கொழும்புக்கு புறப்பட்டு சென்றது. இதே போல் கடந்த ஆண்டு மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு பெண்களை மட்டுமே கொண்டு விமானம் இயக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *