அதானி குழுமம்மீது நடவடிக்கை எடுத்திடுக! காங்கிரஸ் சார்பில் 13-ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை

1 Min Read

 சென்னை, மார்ச் 10 கடந்த ஜன.24 முதல் பிப்.15-ஆம் தேதி வரை அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் கோடி சரிந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி செபியின் விதிமுறை களை மீறியதற்காக அதானி குழுமம் விசாரணையில் உள்ளதாக நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண்டதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. 

மேலும் எல்அய்சி வைத்திருக்கும் அதானி குழுமத் தின் பங்குகளின் மதிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 30 அன்று ரூ.83 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.39 ஆயிரம் கோடியாக குறைந்திருப்பதாகவும், பங்குகளின்விலை வீழ்ச்சி, குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், ஜன.30-இல் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்யும்படி எல்அய்சி நிறுவனத்தை மோடி அரசு நிர்ப்பந்தித்த தாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதானி குழுமம் மீது நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று  (9.3.2023) மாநிலத் தலைவர் கே.எஸ்அழகிரி தலைமையில் சத்யமூர்த்தி பவனில் நடைபெற்றது. அதில் 13-ஆம் தேதி காலை 11 மணிக்கு, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஆ.கோபண்ணா, உ.பலராமன், மாவட்ட தலைவர்கள் சிவ.ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், எஸ்.சி. அணித் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *