கர்ப்ப சன்ஸ்கார் அறிவியல் பூர்வமானதா? : ஆர்எஸ்எஸ்ஸுக்கு நீதிமன்றம் கேள்வி!

2 Min Read

ஆர்எஸ்எஸ்சின் நல்ல குழந்தைகளைப் பெறுவதற்கான ‘கர்ப்ப சன்ஸ்கார்’ திட்டத் திற்கு அறிவியல் பூர்வமானது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா என கொல் கத்தா உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கிரகநிலைகளை கணித்து அதன் படி கணவனும், மனைவியும் சேர்ந்து நல்ல (சிவப்பாகவும், உயரமாகவும் உள்ள) குழந் தைகளைப் பெறுவதற்கான கர்ப்ப சன்ஸ்கார் திட்டத்தை நாடுமுழுவதும் பரப்பும் முயற்சி யில் ஆர்எஸ்எஸ் ஈடுபட்டு வருகிறது. ஆர்எஸ்எஸ்-சின் ஆரோக்கிய பாரதி என்ற சுகாதாரப்பிரிவு இந்தப் பரப்புரைப் பணியை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் ‘உத்தம் சந்ததி’ என்று அழைக் கப்படுவர் என்றும் ஆர்எஸ்எஸ் அமைப் பினர் கூறி வருகின்றனர். கொல்கத்தாவில் கடந்த சனிக்கிழமை இதற்கான பயிற்சிக் கருத்தரங்கு ஒன்றுக்கு ஆர்எஸ்எஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு எதிராக மேற்கு வங்க மாநிலத்தின் குழந்தைகள் உரிமைக்கான ஆணையத்தின் சட்ட ஆலோசகர் நஸீப்கான், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் கர்ப்ப சன்ஸ்கார் திட்டம் அறிவி யல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றல்ல என்றும், பழைய நம்பிக்கைகளின் அடிப் படையிலேயே இந்தத் திட்டம் குறித்த பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வும் குற்றம்சாட்டி இருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகளும், இதை நிரூபிக்க ஆர்எஸ்எஸ் அமைப்பினரிடம் அறிவியல் அடிப்படையிலான ஆதாரங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்று கேள்வி எழுப்பினர்.

ஆனால் நீதிபதிகளின் இந்தக் கேள்விக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

கர்ப்ப சன்ஸ்கார் பற்றி முன்னர் சொன்ன கருத்துகளில் இருந்து ஆர்எஸ்எஸ் அமைப் பினர் தற்போது பின்வாங்குவதாகவும், இது வெறும் அறிவுரை வழங்கப்படும் பயிற்சிக் கருத்தரங்கு மட்டும்தான் என அவர்கள் கூறுவதாகவும் குழந்தைகள் உரிமை ஆணையத்தின் சட்டப் பிரதிநிதியான நஸீப்கான் நீதிபதிகளிடம் அப்போது தெரி வித்தார். குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழக பேராசிரியரின் உரை மட்டுமே அந்த நிகழ்ச்சி யில் இடம்பெற இருப்பதாக தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கூறுவதாகவும் கான் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து ஆர்எஸ்எஸ் சார்பில் முறையான பதிலோ, விளக்கமோ இதுவரை அளிக்கப்பட்டதாக தெரியவில்லை.

மே 8, 2017, தரவு: பத்திரிகை.காம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *