ஆன்லைன் ரம்மி தடை மசோதா திருப்பி அனுப்பியது தவறு ஆளுநர் மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

1 Min Read

அரசியல்

சிவகங்கை,மார்ச்11- சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மருது பாண்டியர் நகர் அரசு மேல் நிலைப் பள்ளிகளில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட நூலகங் களை மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று (10.3.2023) திறந்து வைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயம் நூலகங்கள் இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்ட நிர்வாகம் நாடாளுமன்ற நிதியை பெற்று அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காந்தியார் பெயரில் நூலகங்களை ஏற்படுத்தி வருகிறது. இதை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும்.

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு. இதே விஷயத்தில் அவசர சட்டத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர், முழு சட்டமாக வரும்போது எப்படி குறை கண்டுபிடித்தார். மீண்டும் இந்த மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுந ருக்கு அனுப்பவேண்டும். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குற்றவியல் சட்டத்தில் வருகிறது. குற்றவியல் சட்டத்தை நிறைவேற்றுவது மாநில அரசின் உரிமை. எனவே, அரசியல் சாசனப்படி ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை.

தமிழ்நாட்டில் மற்ற மாநில மக்கள் சகோதரர்களாக வாழ்கின்றனர். திடீரென வடமாநில மக்கள் மீது என்றும் வரக் காரணம் என்ன? பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தூண்டி விடுகின்றனர். தூண்டிவிடுவோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று கூறுகின்றனர். அது வளர்ச்சியல்ல, வீக்கம்தான். வீக்கம்கூட வளர்ச்சியாகத்தான் தெரியும். பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அடக்கி வாசிக்கின்றனர். பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் வைசிராய் போன்று செயல்படுகின்றனர்.

-இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *