நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன?

2 Min Read

காங்கிரஸ் கேள்வி

புதுடில்லி , மார்ச் 11  நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதில் பா.ஜ.க. தனது நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. 

நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்து வந்தது. இந்த விவகாரத்தை இப்போது தெலுங் கானா முதல்- அமைச்சர் சந்திர சேகரராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சி கையில் எடுத்துள்ளது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியு றுத்தி, அந்தக்கட்சியின் மூத்த தலைவர் கவிதா, டில்லி ஜந்தர் மந்தரில் பட்டினிப் போராட்டம் நடத்தினார். இந்த நிலையில், இப்பிரச்சினையை காங்கிரஸ் கட்சியும் எழுப்பி உள்ளது. காங் கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் களில் ஒருவரான அல்கா லம்பா, டில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, அவரிடம்  நாடாளுமன்றத்திலும், சட்டமன் றங்களிலும் பெண்களுக்கு 33 சத வீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோ தா குறித்து கேள்வி எழுப்பினர்.

பெண்கள் இட ஒதுக்கீடு மசோ தாவை மாநிலங்களவையில் நாங்கள் வெற்றிகரமாக நிறைவேற் றினோம். அந்த மசோதா உயிரு டன்தான் உள்ளது. மக்கள வையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை உள்ளது. அவர்கள் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப் படும் என்று 2019 தேர்தல் அறிக் கையில் வாக்குறுதி அளித்திருந் தனர். அதற்கு முன்பேகூட வாக் குறுதி அளித்தனர். ஆனால் 9 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத் தில் இருந்தும் இந்த விவகாரத்தில் அமைதியாக உள்ளனர். நாடாளு மன்ற நிதி நிலை கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங் குகிறது. இதில் பா.ஜ.க. தனது நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இந்த மசோதாவை மக்களவையில் அறி முகம் செய்ய வேண்டும். பெண்கள் உரிமைகளை உறுதிசெய்ய வேண் டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலை வர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப் பதாவது:- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, மாநிலங்களவையில் 2010ஆ-ம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் தேதி நிறைவேறியது. இது காங்கிரஸ் கட்சி தலைமையின் முயற்சிகளால்தான் நடந்தது. ஆனால் மக்களவையில் இதற்கான ஆதரவைப் பெற முடியாமல் போய் விட்டது. இந்த மசோதா காலாவதி யாகி விடவில்லை. அது உயிருடன் தான் இருக்கிறது, நிலுவையில் உள் ளது.  அதற்கு புத்துயிரூட் டுவதைத் தடுப்பது எது? இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *