புலம் பெயர்ந்த தொழிலாளர் பிரச்சினை: மேலும் ஒரு வழக்குப் பதிவு

1 Min Read

பாட்னா, மார்ச் 11 தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய போலி காட்சிப் பதிவு தொடர்பாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து பீகார் காவல்துறை  நடவடிக்கை எடுத்துள்ளது.  

தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொல்லப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் போலி காட்சிப் பதிவு வெளியிட்ட பீகாரை சேர்ந்த ‘யூ டியூபர்’ மணிஷ் காஷ்யப், யுவராஜ்சிங் மற்றும் அமன்குமார், ராகேஷ் திவாரி ஆகியோர் மீது பீகார் காவல்துறையின்  பொருளாதார குற்றப்பிரிவு கடந்த 6-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது. அவர்களில், அமன்குமார் கைது செய்யப்பட்டார். மணிஷ் காஷ்யப், யுவராஜ்சிங் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு பல தடவை தாக்கீது அனுப்பியும் அவர்கள் வரவில்லை. தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *