மீண்டும் முகக்கவசம் கட்டாயம் ஒன்றிய சுகாதாரத் துறை செயலர் அனைத்து மாநிலங்களுக்கும் வலியுறுத்தல்

1 Min Read

புதுடில்லி, மார்ச் 12- இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக  இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல்  தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு முறைகளையும் ஒன்றிய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. 

இது குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் ஒவ்வொரு ஆண்டும் பருவநிலை மாறுபடும் காலங்களில் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். இந்தாண்டு பருவநிலை மாறுபாடு, அரங்கிற்குள் அதிக மக்கள் ஒன்றுகூடுவது, மக்களின் பழக்கவழக்கங்கள் போன்ற காரணங்களால், வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக  H3N2, H1N1, அடினோ வைரஸ் போன்ற வைரஸ் காய்ச்சல் அதிக ரித்து வருவது மக்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்த  முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. 

அதன்படி முகக்கவசம் அணிவது, சமூக இடை வெளி, அடிக்கடி கைகளை  கழுவுதல் என சுகாதார நடைமுறைகளை பொது மக்கள் கடைப்பிடிப்பது குறித்து அவர்களுக்கு விழிப்புர்ணர்வை  ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *