ஆன்லைன் சூதாட்டம் ஆரிய-சூத்திரப் போர்!

1 Min Read

அரசியல்

ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், 4 மாதங்களுக்குப் பிறகு திருப்பி அனுப்பி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதனால் மீண்டும் சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி, அனுப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

சட்ட விவகாரங்களைத் தாண்டி, ஆன்லைன் சூதாட்டங்களைக் குற்றமாகப் பார்க்காத ஒன்றிய பா.ஜ.க. அரசு, ஆன்லைன் சூதாட்டம் மூலம் வருமானம் ஈட்டினால், அதற்கு வருமான வரிகட்டச் சொல்கிறது.

சூதாட்டத்தை மய்யமாகக் கொண்ட மகாபாரதக் கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் எனச் சொல்கிற அரசியல்வாதிகள்தான், சூதாட்ட வருமானத்தில் பங்கு கேட்கும் ஆட்சியாளர்களாக அமர்ந்துள்ளனர். ஆளுநர் அதன் ஒரு அங்கமாக இருக்கிறார். ஆரிய-சூத்திரப் போரில் ஆன்லைன் சூதாட்டம் அடையாளமாகி நிற்கிறது!

– ‘முரசொலி’, 12.3.2023

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *