தெருமுனைக் கூட்டங்கள் – பெரியாரியல் பயிற்சி வகுப்புகள் நடத்த கோவை வடக்குப் பகுதி கழகக் கலந்துரையாடலில் முடிவு

Viduthalai
1 Min Read

அரசியல்

கோவை, மார்ச் 12-  கோவை வடக்கு பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம் கடந்த 8.3.2023 அன்று மாலை 7 மணி யளவில்  அஞ்சுகம் நகர் கவி.கிருஷ்ணன்  இல்லத்தில் மாவட்ட  தலைவர் தி.க.செந்தில்நாதன் அவர்களின் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட செயலாளர் க.வீரமணி, மண்டல செயலாளர் ச.சிற்றரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகர செயலாளர் ச.திராவிட மணி, வடக்குப் பகுதி செயலாளர் கவிஞர் கவி.கிருஷ்ணன், தெற்குப் பகுதி செயலாளர் தெ.குமரேசன், பிள்ளையார்புரம் ஆனந்த், அஞ்சுகம் நகர் கோபால், ஜெகநாதன், சவுகத் பாஷா, மோகனசுந்தரம், செயக்கொடி ஆகியோர் பங்கேற்று கருத்துகளைப் பகிர்ந்து கொண் டனர்.

தீர்மானம்: 1

கோவை வடக்குப் பகுதியில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதெனவும், ஒரு நாள் பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம்: 2

திராவிட மாணவர் கழக 80 ஆம் ஆண்டு மாநில மாநாட்டினை கோவைக்கு வழங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *