ஏழை மக்களை நெருக்கடியில் தள்ளியிருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு 2021-2022 நிதியாண்டில் ரூ. 1,811 கோடியாக குறைந்த சமையல் எரிவாயு உருளை மானியம்!

1 Min Read

புதுடில்லி, மார்ச் 12 ஏழை மக்களை நெருக்கடியில் தள்ளியிருக்கும் ஒன்றிய அரசு பெட்ரோலியப் பொருட்களை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக கூறி, அந்த நிறுவனங்களுக்கு மட்டும்  ரூ.22 ஆயிரம் கோடியை இழப்பீட்டுத் தொகையாக கொடுத்துள்ளது.

 சமையல் எரிவாயு உருளை விலை தற்போது 1,018 ரூபாயைக் கடந்துள்ள நிலையில், அவற்றிற்கு  ஒன்றிய அரசால் வழங்கப்படும் மானியம் ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்பட்டு கொண்டே வருகிறது.  2018_2019 நிதியாண்டில் ரூ. 37  ஆயிரத்து 209 கோடியும் 2019 -_2020 நிதியாண்டில் ரூ. 24 ஆயிரத்து 172 கோடியும் 2020_-2021 நிதியாண்டில் ரூ.11 ஆயிரம் 896 கோடியும் மானியமாக வழங்கப்பட்டது.  இவ்வாறு படிப்படியாக குறைக்கப்பட்டுக் கொண்டே வந்த மானியத் தொகை, கடந்த 2021_-2022  நிதியாண்டில் பல மடங்கு குறைக்கப்பட்டு, தற்போது வெறும் ரூ. ஆயிரத்து 811 கோடி என்ற அளவிற்கு தள்ளப்பட்டு உள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள  குடும்பங்கள், பெண்களைக் குடும் பத் தலைவராக கொண்ட குடும்பங்களுக்கு உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 2016-ஆம் ஆண்டு 8 கோடி இணைப்புகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. இந்த  இணைப்புகளின் எண்ணிக்கையானது 2023-ஆம் ஆண்டில் வெறும் 1.6 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 6.5 கோடி குடும் பங்கள் மானியமல்லாத சமையல்  எரிவாயு உருளை வாங்குவதற் கான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு ஏழை மக்களை நெருக்கடியில் தள்ளியிருக்கும் ஒன்றிய அரசு பெட்ரோலியப் பொருட்களை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக கூறி, அந்த நிறுவனங்களுக்கு மட்டும் ரூ. 22 ஆயிரம் கோடியை இழப்பீட்டுத் தொகையாக கொடுத்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *