‘மார்பிங்’ படங்களுடன் பெண் நீதிபதிக்கு மிரட்டல்

1 Min Read

 ஜெய்ப்பூர், மார்ச் 12- ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெண் நீதிபதி ஒருவர் கடந்த மாதம் 7ஆம் தேதி நீதிமன்ற அறையில் இருந்தபோது, அவருக்கு ஒரு பார்சல் வந்தது. பெண் நீதிபதியின் குழந்தை படிக்கும் பள்ளியில் இருந்து அந்த பார்சல் வந்துள்ளதாக கூறி அதனை நீதிபதியின் சுருக்கெழுத்தாளரிடம் இளைஞர் ஒருவர் கொடுத்துள்ளார்.

பார்சலை திறந்தபோது அதில் சில இனிப்புகளுடன் பெண் நீதிபதியின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்கள் இருந்துள்ளன. அதில் இருந்த கடிதத்தில், “ரூ.20 லட்சத்துடன் தயாராக இரு. இல்லாவிடில் இந்தப் படங்களை வெளியிட்டு உன்னையும் உன் குடும்பத் தையும் அவமானப்படுத்துவேன். இடமும் நேரமும் பிறகு சொல்கிறேன்” என்று கூறப்பட்டிருந்தது.

இதனால் பெண் நீதிபதி அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் 20 நாட்களுக்குப் பிறகு அவரது வீட்டுக்கு இதுபோல் மற்றொரு பார்சல் வந்துள்ளது. இதையடுத்து காவல் துறையில் பெண் நீதிபதி புகார் அளித்தார். இது தொடர்பாக கடந்த 28ஆம் தேதி வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பார்சலை கொண்டுவந்து கொடுப்பது தெரிகிறது. அவரை பிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *