ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வுடனான எனது போராட்டம் தொடரும் லாலுபிரசாத் உறுதி

1 Min Read

அரசியல்

பாட்னா, மார்ச் 12- கடந்த 10.3.2023 அன்று டில்லி, பீகார் மாநிலங்களில் 15 இடங்களில் லாலு பிரசாத்தின் உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற் கொண்டது. தேஜஸ்வி யாதவின் நியூ பிரண்ட்ஸ் காலனியில் உள்ள இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அங்கு அவர் தனது மனைவி ராஜ்சிறீயுடன் வசித்து வருகிறார். குழந்தை பிறக்கும் நிலையில் உள்ள அவர் மனைவியை வலுக்கட்டாயமாக 15 மணி நேரம் அமர வைத்து சோதனை நடத்தினர். 

பீகார் மாநில மேனாள் முதலமைச்சர் ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் லாலு பிரசாத் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, 

“நான் கறுப்பு எமர்ஜென்சி காலத்தைப் பார்த்தேன், அதற்கு எதிராகவும் போராடினேன். கர்ப்பிணி மருமகள் மட்டுமின்றி என் பேரக் குழந்தைகள் மற்றும் மகள்களையும் அமலாக்கத் துறை நீண்ட நேரம் உட்கார வைத்தார்கள். பாஜக மிகவும் கீழ்நிலையில் இருப்பது நன்றாகத் தெரிகிறது” என்று லாலு பிரசாத் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுடனான எனது போராட்டம் தொடரும். நானோ என் குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாரும் அவர்கள் முன் தலைவணங்கமாட்டோம் என்று அவர் மேலும் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *