இந்திராகாந்தி தேசிய பல்கலைக் கழகத்தில் கேரள மாணவர்கள் மீது தாக்குதல்!

1 Min Read

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மீது தாக்குதல் – பாகுபாடு!

ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

அரசியல்

சென்னை, மார்ச்.13- இந்திராகாந்தி தேசிய பழங்குடியினப் பல்கலைக் கழகத் தில் கேரள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தகவல் அறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்றிரவு (12.3.2023) வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் “உயர்கல்வி நிறுவனங் களில் மாணவர்கள் மீது பாகுபாடு காட்டப்படுவதையும் – தாக்குதல் நடத்தப்படுவதையும் ஒன்றிய அரசு உடனே நிறுத்த வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலை தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்திரா காந்தி தேசிய பழங்குடியினப் பல்கலைக் கழகத்தில் கேரள மாணவர்கள் மீது அவர்களைப் பாது காக்க வேண்டிய பொறுப்புடைய பாதுகாப்புப் பணியா ளர்களே தாக்குதல் நடத்தியுள்ள வன்செயலுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மீது பாகுபாடு காட்டப்படுவதும், தாக்குதல் நடத்தப்படுவதும் அதிகரித்து வரும் நிலையில், ஒன்றிய அரசு தலையிட்டு இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

-இவ்வாறு அப்பதிவில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *