இந்திராகாந்தி தேசிய பல்கலைக் கழகத்தில் கேரள மாணவர்கள் மீது தாக்குதல்!

Viduthalai
1 Min Read

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மீது தாக்குதல் – பாகுபாடு!

ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

அரசியல்

சென்னை, மார்ச்.13- இந்திராகாந்தி தேசிய பழங்குடியினப் பல்கலைக் கழகத் தில் கேரள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தகவல் அறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்றிரவு (12.3.2023) வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் “உயர்கல்வி நிறுவனங் களில் மாணவர்கள் மீது பாகுபாடு காட்டப்படுவதையும் – தாக்குதல் நடத்தப்படுவதையும் ஒன்றிய அரசு உடனே நிறுத்த வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலை தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்திரா காந்தி தேசிய பழங்குடியினப் பல்கலைக் கழகத்தில் கேரள மாணவர்கள் மீது அவர்களைப் பாது காக்க வேண்டிய பொறுப்புடைய பாதுகாப்புப் பணியா ளர்களே தாக்குதல் நடத்தியுள்ள வன்செயலுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மீது பாகுபாடு காட்டப்படுவதும், தாக்குதல் நடத்தப்படுவதும் அதிகரித்து வரும் நிலையில், ஒன்றிய அரசு தலையிட்டு இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

-இவ்வாறு அப்பதிவில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *