நடிகர்களுடன் படப்பிடிப்பு நடத்தி வடமாநிலத்தவர் தாக்கப்படுவதுபோல் சித்தரித்த கும்பல் கைது தமிழ்நாடு காவல் துறையினர் பீகாரில் முகாம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருப்பூர், மார்ச் 13- தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் தாக்கப்படுவதாக கிளம்பிய சர்ச்சைக்கு இரு மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள் ளது. ஆனால் இதன் பின்னணியில் ஒரு கும்பல் செயல்பட்டது தெரியவந்துள்ளது. கைது செய்யப் பட்ட 3 பேரிடம் நடத்திய விசார ணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பீகாரைச் சேர்ந்த மணிஷ் காஷ்யப் என்பவர் தன்னை ஒரு சமூக செயற்பாட்டாளர் என கூறிக் கொண்டு தனது யூடியூப் சேனலில் போலி செய்திகளை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இதன்மூலம் அவருக்கு மாதம் ரூ.5 லட்சம் வரை வருமானம் கிடைத் துள்ளது. வருமானத்தை மேலும் கூட்டுவதற்காக போலியான காட்சிகளை படம் பிடிக்க முடிவு செய்துள்ளார்.

இதற்காக பாட்னாவின் ஜக்கன்பூர் பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அதில் படுகாயம் அடைந்தது போல் வேடமிட்ட இருவர் தமிழ் நாட்டில் தாங்கள் தாக்கப்பட்டது போல் பேசி நடிக்க வைக்கப் பட்டுள்ளனர்.

இவ்வாறு சித்தரிக்கப்பட்ட காட்சிகள் மார்ச் 8இல் ஹோலி அன்று சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மணிஷ் காஷ்யப் உள்ளிட்ட மூவர் மீது பீகார் காவல் துறையினர் நேற்று (12.3.2023) வழக்குப்பதிவு செய் தனர். இதில் ராகேஷ் திவாரி என்பவர் கைது செய்யப் பட்டுள் ளார்.

இதுதவிர 30 போலி காட்சிப் பதிவுகளை பதிவேற்றம் செய்ததாக மற்றொரு வழக்கு மணிஷ் காஷ்யப் உள்ளிட்ட 4 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அமன் குமார், ரஞ்சன் குமார் ஆகியோர் கைதாகி உள்ளனர்.

இதுகுறித்து பீகார் பொருளா தார குற்றப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் சுஷில் குமார் கூறும்போது, “இரு வழக்குகளிலும் முக்கியக் குற்ற வாளி மணிஷ் காஷ்யப் உள்ளிட்ட 3 பேர் தேடப்பட்டு வருகின்றனர். மணிஷ் மீது மேலும் 7 வழக்குகள் உள்ளன.

இவை 2 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்டவை. மணிஷ் காஷ்யப் மற்றும் ராகேஷ் திவாரி மீது தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி யிலும் ஒரு வழக்கு உள்ளது” என்றார்.

கிருஷ்ணகிரி வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க, ஆய்வாளர் சவீதா தலைமையில் தனிப்படை பாட்னாவில் முகாமிட்டுள்ளது. இவர்கள் பீகாரில் கைதான ராகேஷ் திவாரியை டிரான்ஸிட் ரிமாண்டில் கிருஷ்ணகிரி அழைத் துச் சென்று விசாரிக்க உள்ளனர். இதுபோன்ற வழக்குகளுக்காக இரு மாநிலங்கள் தரப்பில் தலா 5 பேர் கொண்ட பொறுப்பு அதிகா ரிகள் குழு அமர்த்தப்பட்டுள்ளது. 

இக்குழுவுக்கு பீகாரில் ஏஜிடி ஜிதேந்தர் சிங்கும் தமிழ்நாட்டில் காவல்துறை தலைவர் அவினேஷ் குமாரும் தலைமை ஏற்றுள்ளனர். தமிழ்நாடு குழு கடந்த வாரம் பாட்னாவுக்கு நேரில் வந்தும் ஆலோசனை நடத்திச் சென்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *