நானோ, என் குடும்பத்தினரோ ஒருநாளும் ஆர்எஸ்எஸ் – பா.ஜ.க.வுக்கு அடிபணிய மாட்டோம்! : லாலு பிரசாத்

1 Min Read

அரசியல்

புதுடில்லி, மார்ச் 13  ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வுக்கு  எதிரான எனது போராட்டம் தொடரும். நானோ என் குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாரும் அவர்கள் முன் தலை வணங்கமாட்டோம் என்று லாலு பிர சாத் அறிவித்துள்ளார். 

டில்லி, பீகார் மாநிலங்களில், லாலு  பிரசாத் மற்றும் அவரது உறவினர் களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.  லாலுவின் மகன் தேஜஸ்வியின் நியூ பிரண்ட்ஸ் காலனியில் உள்ள இல் லத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது நிறைமாதக் கர்ப்பிணி யான தேஜஸ்வியின் மனைவி ராஜ் சிறீயை வலுக்கட்டாயமாக 15 நேரம் ஒரே இடத்தில் அமர வைத் துத் துன்புறுத்தியதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இந்நிலை யில், இந்த துன்புறுத்தல் குறித்து லாலு பிரசாத் டுவிட்டரில் பதி விட்டுள்ளார்.  

அதில், “நான் கறுப்பு எமர் ஜென்சி காலத்தைப் பார்த்தேன், அதற்கு  எதிராகவும் போராடி னேன். கர்ப்பிணி  மருமகள் மட்டு மின்றி, என் பேரக் குழந்தைகள் மற்றும் மகள்களையும் அமலாக்கத் துறை நீண்ட நேரம் உட்கார வைத் தார்கள். பாஜக மிகவும் கீழ் நிலையில் இருப்பது நன்றாகத் தெரிகிறது” என்று குறிப்பிட் டுள்ளார். “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வுக்கு எதிரான எனது போராட்டம் தொட ரும். நானோ என் குடும்பத்தைச் சேர்ந்த  வேறு யாரும் அவர்கள் முன் தலை வணங்கமாட்டோம்” என்றும் லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *