மக்களுக்கு விரைவில் தீர்ப்பு கிடைக்க தொழில் நுட்பத்தை விரைவுபடுத்த வேண்டும்

1 Min Read

உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி வலியுறுத்தல்

அரசியல்

புதுடில்லி, மார்ச் 13 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) நாடுகளின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் 18-ஆவது கூட்டம் டில்லியில் கடந்த 10.3.2023 அன்று தொடங்கியது.   

கூட்டத்தில் ‘‘ஸ்மார்ட் நீதிமன் றங்கள் மற்றும் நீதித்துறையின் எதிர் காலம்’’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது: நீதித்துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்தியாவில் இ-நீதிமன்றங்கள் உருவாக்கப் பட்டன.

இதனால் நீதித்துறை திறம் படவும், வெளிப்படைத் தன்மை யுடனும் செயல்படுகிறது. இதில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பணிகள், தேவையான டிஜிட்டல் கட்டமைப்புகளை உருவாக்கின. மூன்றாம் கட்ட பணி, நடை முறைகளை எளிதாக்கி, நீதித்துறை சேவைகளை மக்களை சென்ற டைவதை அதிகரிக்கும்.

நீதி என்பது அத்தியாவசிய சேவை என்பதற்கு ஏற்றாற் போல் ஸ்மார்ட் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும். மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும். ஒவ் வொருவருக்கும் சரியான நேரத்தில் நீதி கிடைப்பதை நீதித்துறை உறுதி செய்ய வேண்டும். இதை கருத்தில் கொண்டு மக்களுக்கும், நீதித் துறைக்குமான இடைவெளியை குறைக்க நாம் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம். கரோனா பெருந்தொற்று காலத்தில் டிஜிட் டல் பயன்பாடு நன்கு உணரப் பட்டது. 

இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *