நாடாளுமன்றத்தில் ஒன்றிய பாஜக அரசின் அதிர்ச்சித் தகவல்
புதுடில்லி,மார்ச்14- விழுப்புரம் மக்களவை உறுப்பினர் து.ரவிக்குமார் எழுப்பிய கேள்வியும், ஒன்றிய இணையமைச்சரின் பதிலும் வருமாறு,
பள்ளி மாணவர்களிடையே அறி வியல் உணர்வைத் தூண்டி அவர் களை விஞ்ஞானிகளாக வளர்த் தெடுக்கும் திட்டம்தான் தேசிய திறமை தேடல் திட்டம் (NTSS)ஆகும்.
அ) தேசிய திறமை தேடல் திட்டத் தின் (NTSS) கீழ் வழங்கப்படும் உதவித் தொகை விவரங்கள்:
ஆண்டுகள் 2019 முதல் 2021 வரை, ஆண்டு வாரியாகத் தெரிவிக் கவும்;
(ஆ) திறமையான மாணவர்களை அடையாளம் காண NCERTக்கு NTSS உதவியிருக்கிறதா?;
(இ) தேசிய திறமை தேடல் திட் டத்தை அரசாங்கம் தொடர்கிறதா; மற்றும்
(ஈ) இல்லையென்றால், அது நிறுத் தப்பட்டதற்கான காரணங்கள் என்ன?
என்ற வினாக்களை இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பினேன். அதற்கு ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ண தேவி பின்வருமாறு பதில் அளித்தார் :
தீ) ஆம், திறமையான மாணவர்களை அடையாளம் காண NCERTக்கு NTSS உதவியது. NTS விருது பெற்ற பலர், உலகெங்கிலும் உள்ள பல்வேறு புகழ்பெற்ற நிறுவ னங்களில் முன்னணி பதவிகளில் பணியாற்றி வருகின்றனர்.
(c&d) NTSS என்பது கல்வி அமைச்சகத்தால் முழுமையாக நிதிய ளிக்கப்பட்ட ஒன்றிய அரசின் திட்ட மாகும். NTSS அதன் தற்போதைய வடிவம்/வடிவத்தில் 31.03.2021 வரை தொடர்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட் டது. மேலும் திறமையைக் கண்டறிந்து வளர்ப்பதற்கான நோக்கம் திறம்பட நிறைவேற்றப்படுவதை உறுதிசெய் யும் வகையில் திட்டத்தை மறுவடி வமைப்பு செய்ய முடிவு செய்யப்பட் டுள்ளது” எனத் தெரிவித்துள்ள அமைச்சர் 2019 முதல் 2021 வரை ஒவ்வொரு ஆண்டும் அந்தத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையையும் தந்துள்ளார்.
கல்வியில் அறிவியல் சிந்தனை களை ஒழித்துவிட்டு சமயச்சார்பான கருத்துகளைத் திணித்துவரும் பாஜக அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையை வளர்த் தெடுக்கும் இந்தத் திட்டத்தை நிறுத்தி விட்டது. நிறுத்திவிட்டதாக ஒப்புக் கொள்ளாமல் மாற்றி அமைக்கப் போகிறோம் எனக் கூறுகிறார்கள்.