ஜாதி இழிவை நிலைப்படுத்தும் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை

Viduthalai
1 Min Read

சென்னை, மார்ச் 15- தமிழ் நாட்டில் கோயில் நிகழ்ச்சிகள் முதல் எந்தவொரு நிகழ்ச்சியிலும் குறவன், குறத்தி ஆட்டம் என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசாணை வெளியிடப்பட் டுள்ளது. தமிழ்நாட்டின் பெரும் பாலான கோயில் நிகழ்ச்சிகளில் ஆடல் பாடல் நடன நிகழ்ச்சிகள் நடத்துவதுண்டு. இந்த நிகழ்ச்சியில் குறவன், குறத்தி வேடமிடும் கலைஞர்கள் ஆபாசமாக நடந்து கொள்வதாகவும், தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்து வதாகவும் புகார் எழுந்தது. இது குறவர் சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கில் இருப்பதாக தமிழ்நாடு குறவர், மலைக் குறவர் இன மக்கள் உள்ளிட்ட பழங்குடியின சங்கங் கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது. தொடர்ந்து தமிழ்நாடு அரசும் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை முதன் மைச் செயலாளர் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ள உத்தரவில், , “தமிழ் நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களா கப் பதிவு செய்வதற்காக அடையா ளம் காணப்பட்ட 100 கலைகள் பட்டியலில் 40ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ள குறவன் – குறத்தி ஆட்டம் என்ற கலைப்பிரிவை நீக்கம் செய்து அரசு உத்தரவிடு கிறது.

எந்தவொரு கலை நிகழ்ச்சிக ளிலும் குறவன் -_- குறத்தி ஆட்டம் என்ற கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. குறவன், குறத்தி ஆட்டம் எந்த ஒரு கலை நிகழ்ச்சியிலும் நடைபெறவில்லை என்பதை கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் உறுதிப்படுத்த வேண் டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *