ஆதரவற்ற முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

1 Min Read

அரசியல்

சென்னை, மார்ச் 15- சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஆதரவற்ற  இல்லத்தில் தங்கியிருக்கும் முதியோர் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன பயிற்சி மய்யத்தின் மேனாள் முதல்வர் எம்.கே.கருப்பையாவின் மூத்த மகள் சூர்யா கடந்த 2014ஆம் ஆண்டு திடீரென அறியாத காய்ச்சலால் திடீரென உயிரிழந்தார். அவரது நினைவாக மருத்துவர் கே.சூர்யா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை குடும்பத்தினரால் தொடங்கப் பட்டது. அவரது நினைவு நாள் மற்றும் பிறந்த நாளன்று ஆதரவற்ற சிறார்கள் மற்றும் முதியோர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டு வருகின்றன.

இதன்ஒருபகுதியாக மருத்துவர் சூர்யாவின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 50-க்கும் மேற்பட்ட முதியோர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய்  உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பின்னர் மதிய உணவும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் எல்அய்சி மேனாள் உயரதிகாரிகள் எம்.கே.கருப்பையா, கண்ணதாசன், ஆறுமுக நயினார், எல்அய்சி வளர்ச்சி அதிகாரிகள் ஆறுமுகசாமி, அய்யாச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் முதியோர்களுக்கு சேவை செய்தவர்கள் சிறப்பிக்கப் பட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *