பல் மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டதற்கான சிறந்த இடம் தேர்வு

1 Min Read

 சென்னை, மார்ச் 15- இந்தியாவின் நவீன கல்வி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டும் வகையில், ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்ட வகையில் முதலிடத்தில் இருந்த ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் ஸ்கூல் ஆஃப் டென்டல் மெடிசினை முந்தி, உலகின் உயர்ந்த பல் மருத்துவ நிறுவனமாக தமிழ் நாட்டின் சவீதா பல் மருத்துவக் கல்லூரி  உருவெடுத் துள்ளது.

உலகின் மிகப்பெரிய அறிவியல் தரவுத்தளமான ஸ்கோபஸில், இந்தியாவின் மதிப்புமிக்க பல் மருத்துவக் கல்லூரியான சவீதா பல் மருத்துவக் கல்லூரி வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகளின் எண்ணிக்கை 2023 மார்ச் மாதத்தில், 8,920 ஆக உயர்ந்தது. ஹார்வர்டு டென்டல் ஸ்கூல் ஆஃப் மெடிசினின் 8,854 ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தாண்டி, ​​ இந்த அரிய சாதனையை அந்தக் கல்லூரி படைத்தது.

இந்தப் புதிய மைல்கல் குறித்து சவீதா பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் என்.எம். வீரய்யன் பேசுகை யில், “ஆராய்ச்சி, நோயாளி பராமரிப்பு, கண்டுபிடிப்பு ஆகியவற்றில் எங்களுடைய அசைக்க முடியாத அர்ப்பணிப்பு போன்றவை காரணமாக பல் மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டவர்களில் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளோம். இந்த சாதனை இந்தியாவின் வளர்ந்து வரும் கல்வித் துறை சார்ந்த திறமைக்கு ஒரு சான்றாகும்” என்று குறிப்பிட்டார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *