மருத்துவ கல்வி இயக்குநராக டாக்டர் சாந்திமலர் நியமனம்

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, மார்ச் 15- மருத்து வக் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக டாக்டர் ஆர்.சாந்திமலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவ மனை டீனாக (பொறுப்பு) ஆயிஷா சாகீம் நியமிக்கப் பட்டுள்ளார்.

மருத்துவக் கல்வி இயக்கத்தின் இயக்குந ராக (டிஎம்இ) இருந்த டாக்டர் நாராயணபாபு கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி யுடன் ஓய்வு பெற்றார். எனவே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக வும், டிஎம்இ கூடுதல் இயக்குநராகவும் இருந்த டாக்டர் ஆர்.சாந்திமலர் டிஎம்இ இயக்குநராக (பொறுப்பு) நியமிக்கப் பட்டார். அவர் கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பொறுப்பையும் கூடு தலாக கவனித்து வந்தார்.

இந்நிலையில், டிஎம்இ இயக்குநராக ஆர்.சாந்திமலர் நியமிக் கப்பட்டுள்ளார். இதற் கான உத்தரவை சுகாதா ரத் துறைச் செயலாளர் செந்தில்குமார் பிறப்பித் துள்ளார்.

அதேபோல், கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக (பொறுப்பு) மருத் துவர் ஆயிஷா சாகீம் நிய மிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் பொறுப்பு இயக்குநராக திறம்பட பணியாற்றி வந்த சாந்திமலர், முழு நேர இயக்குநராக நியமிக் கப்பட்டிருப்பது வரவேற் கத்தக்கது.

மருத்துவர்கள், முது நிலை, இளநிலை மருத் துவ மாணவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களின் நலன் களையும் பாதுகாத்து பொதுமக்களுக்கு உரிய மருத்துவச் சேவை வழங் குவதிலும் அவர் சமரசம் இன்றி செயல்பட வேண் டும்” என்று தெரிவித்து உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *