ஆளுநர் தமிழிசைக்கு எதிராக தெலங்கானா அரசின் மனுமீது விசாரணை

1 Min Read

உச்சநீதிமன்றம் அறிவிப்பு

அரசியல்

புதுடில்லி, மார்ச் 15 தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சந்திர சேகர ராவ் தலைமையில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் உள்ளார். 

அவருக்கும் ஆளும் அரசுக்கும் தொடர்ச்சியாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

ஆளுநர் தமிழிசையின் செயல் பாடுகளுக்கு தொடர்ச்சியாக தெலங் கானா அரசு விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. ஆளுநர் மாளிகையில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்வை கூட முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார்.

சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மசோதாக் களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுந ருக்கு உத்தரவிடக்கோரி, தெலங் கானா தலைமைச் செயலாளர் சாந்திகுமாரி சார்பில் உச்சநீதிமன் றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய் யப்பட்டது.

ஆளுநரின் இச்செயலை அரச மைப்பு சட்டம் அளித்துள்ள உரி மைகளுக்கு எதிரான செயல் என அறிவிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனு வரும் 20ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *