சென்னை, மார்ச் 16 – இசுலாமியர்கள் மீதான வெறுப்புணர்வை எதிர்த்துப் போரிடுவதற்கான உலக நாளையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், சிறுபான்மையினரின் உரிமை களைப் பாதுகாக்க உறுதி ஏற்போம் என்று குறிப்பிட் டுள்ளார். அதன் விவரம் வருமாறு: வரலாறு நெடுக நிறைந்திருக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன் முறைச் செயல்கள் என்பது மனித இனத்தின்மீது படிந்துள்ள அழியாக் களங்கம்! இசுலாமியர்கள் மீதான வெறுப் புணர்வை எதிர்த்துப் போராடுவதற்கான உலக நாளான இன்று, சிறுபான்மையினருக்கு எதிரான அமைப்புரீதியான ஒடுக்கு முறையை எதிர்த்துப்போராடவும், அரசமைப்புச் சட்ட விழுமியங்களின் வழியில் அவர்களின் உரிமைகளைப் பாது காக்கவும் உறுதியேற்போம்! இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க உறுதி ஏற்போம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ட்விட்டர்’ பதிவு!
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books