செங்கல்பட்டு மாவட்டஇளைஞர்களுக்காக வரும் 18-ஆம் தேதி மிகப் பெரிய வேலைவாய்ப்பு முகாம்

1 Min Read

 செங்கல்பட்டு, மார்ச் 16  செங்கல்பட்டு மாவட்டத்தில் படித்தவேலையில்லா இளைஞர்களுக்காக மெகா வேலைவாய்ப்பு முகாம்நடக்கிறது. வரும் மார்ச் 18-ஆம் தேதிநடைபெறும் இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்று   பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ.ரா.ராகுல்நாத் கேட்டுக் கொண்டுள்ளார்.

  இந்த ஆண்டுக்கான மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 18-ஆம் தேதி (சனிக்கிழமை) வித்யாசாகர் மகளிர் கலை மற்றும்அறிவியல் கல்லூரியில் நடக்கிறது. இதனை செங் கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்த உள்ளது.

இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு பி.இ., அய்டிஅய் மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், செவிலியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். 18 முதல் 40 வயது வரை: இதற்கான வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை இருக்கலாம். இவர்கள் தங்களுடைய கல்வி சான் றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வரும் 18-ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் 3 மணி வரைமுகாமில் கலந்துகொண்டு உரியவேலையை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும், இம்முகாமில் பங்குபெற விருப்பமுள்ள வர்கள் மற்றும் வேலைதேடும் இளை ஞர்கள் https://tnprivatejobs.tn.gov.in https://tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுவதன் மூலம் தொடர்புடைய நபர் களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்துசெய்யப்பட மாட்டாது எனவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *