டிஎன்பிஎஸ்சி, வங்கி, எஸ்எஸ்சி, ஆர்.ஆர்.பி. போட்டித் தேர்வு இலவசப் பயிற்சி தலைமைச் செயலாளர் அறிவிப்பு

2 Min Read

அரசியல்

சென்னை, மார்ச் 16- போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இயங்கும் பயிற்சி மய்யங்களில் கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க இன்று (15.3.2023) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரும், பயிற்சித் துறையின் தலைவருமான வெ.இறை யன்பு வெளியிட்ட அறிக்கையில், “டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, வங்கித்தேர்வு நிறுவனம், ஆர்ஆர்பி ஆகிய தேர்வு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மய்யங்களால் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சென்னை பழைய வண்ணையில் உள்ள சர் தியாகராயர் கல்லூரியிலும் (500 இடங்கள்), நந்தனத் தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியிலும் (300 இடங்கள்) நடத்தப் படுகின்றன.

போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணைய வழியாக விண்ணப்பங்கள் பெற்று, சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாள்களில் நடைபெறும். பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

பயிற்சியில் சேர விரும்புவோர் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மய்ய இணையதளம்  (www.civil servicecoaching.com)  வாயிலாக இன்று (மார்ச் 15) முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங் களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7373532999, 9894541118, 8667276684 மற்றும் 8489334419 ஆகிய அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப் பெண்களின் அடிப்படையில் தமிழ்நாடு அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர் வர்கள் தெரிவு செய்யப்பட்டு. தேர்வர் களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். ஏப்ரல் 10ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப் படும்’ என்று அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *