அன்னைமணியம்மையார் நினைவுநாள்சிந்தனை

Viduthalai
2 Min Read

அன்னை மணியம்மையார்பற்றி அய்யா…

அரசியல்

மணியம்மையார் இயக்கத் தொண்டுக் கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு – தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக என் உடல் நிலை எப்படியோ; என் தொண்டுக்கு தடையா யில்லாமல் நல்ல அளவுக்கு உதவி வந்ததால் என் உடல் பாதுகாப்பு. வீட்டு நிர்வாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன்.

‘விடுதலை” (15.10.1962)

***

எனது காயலா சற்றுக் கடினமானதுதான். எளிதில் குணமாகாது. மூத்திர வழியிலே கற்கள் இருக்கின்றன. அவை கரைய மாதக் கணக்கில் காலமாகும். ஒரு சமயம் ஆப்ரேஷன் (அறுவைச் சிகிச்சை) தேவை இருந்தாலும் இருக்கலாம். ஆனாலும். நான் பயப்படவில்லை. எதற்கும் தயாராக இருக்கிறேன். மணியம்மையார் கவனிப் பும், உதவியும் அளவிடற்கரியது.

(தந்தை பெரியார் 89ஆம் பிறந்தநாள் மலர்) “விடுதலை” (17.9.1967)

***

ஆகஸ்ட் முடிந்தால் 93 வயது முடிந்து விட்டது. செப்டம்பர் பிறந்தால் 94ஆம் ஆண்டு பிறக்கின்றது. தயவு தாட்சண்யம் காட்டாமல் சுதந்திரமாய் இருந்து பார்க்கலாம் என்று கருதுகின்றேன்.

நான் சென்னைக்கு வந்தால் ‘உண்மை’ மாத இதழையும், சென்னைக்குக் கொண்டு வந்து விடலாம் என்று கருதுகின்றேன்.

சென்னைக்கு வருவதில் வேறு பல சங்கடங் களும் இருக்கின்றன. திருச்சியில் பயிற்சிப் பள்ளிகள் இரண்டு இருக்கின்றன; பிரைமரிப் பள்ளி ஒன்று இருக்கின்றது; அநாதைப் பிள் ளைகள் விடுதி ஒன்று இருக்கின்றது; வரும் ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளி ஒன்று ஏற்படுத்த அனுமதி பெற்று நடத்தப்படப் போகின் றது. ஈரோட்டில் ஒன்று ஏற்படுத்த உத்தேசம். இவையெல்லாம் திருமதி மணியம்மையார் முயற்சியில்தான் நடைபெறுகின்றன. 10, 12 ஏக்கர் தோட்டப் பண்ணை ஒன்றும் நடைபெறுகின்றது. பல ஆயிரக்கணக்கில் வாடகை வரும் பல கட் டடங்களும் திருச்சியில் இருக்கின்றன. ஆகவே, மணியம்மை அவர்கள் திருச்சியில் இருக்க வேண்டியிருக்கிறது.

நான் சென்னைக்கு வந்தால், மணியம்மையார் என்னைத் தனியாய் இருக்கச் சம்மதிக்க மாட் டார்கள். அவர்கள் சென்னைக்கு வந்து விட்டால், திருச்சி நடப்புகள் பாதிக்கப்படும். இது ஒரு சங்கட மான நிலைமை என்றாலும் ஏதாவது செய்தாக வேண்டியிருக்கிறது.

– தந்தை பெரியார்

“விடுதலை” தலையங்கம். 19.07.1972

***

அம்மா பற்றி அண்ணா…

“அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும் போது. இப்போது எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள் ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய் யாவுக்கு இருந்தன. அப்படியிருந்து அய்யாவை, கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சேரும்”

***

அம்மா பற்றி புரட்சிக் கவிஞர்…

தாம் போகும் வழிகளை மறித்துக் கொண்டிருந்த ஒரு குன்றத்தைக் குத்தி உடைத்து கொண்டிருந்த இரண்டு தோள்களைக் கண்டோம். தம்மை நோக்கிச் சீறிவருகின்ற நெருப்பு மழைக்குச் சிரித்துக் கொண்டிருந்த இரண்டு உதடுகளைக் கண்டோம். “தமிழ்நெறி காப்பேன் – தமிழரைக் காப்பேன் – ஆரிய நெறியை அடியோடு மாய்ப்பேன்” என்று அறையில் அல்ல மலைமேல் நின்று மெல்ல அல்ல, தொண்டை கிழிய முழக்க மிடும் ஓர் இருடியத்தால் செய்த உள்ளத்தைக் கண்டோம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *