தொடரட்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி சாதனை! விபத்துக்குள்ளானவர்களை காக்கும் திட்ட வெற்றிபற்றி முதலமைச்சர் பெருமிதம்

Viduthalai
1 Min Read

சென்னை, மார்ச் 17- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சொன்னதைச் செய்வது மட்டுமல்ல; சொல்லாமலும் செய்வோம். செய்கிறோம்!

தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. ஆனால் ‘Golden Hours’ காலக்கட்டத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக்கூடாதென, கடந்த 18-12-2021 அன்று  ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ மனையில் தொடங்கி வைத்தேன்.

இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழ்நாட்டில் உருவான இந்தத் திட்டம், ஒரு முன்மாதிரி திட்டம்!

இன்று அரிகிருஷ்ணன் என்பவர் 1,50,000-ஆவது பேராகப் பனிமலர் மருத் துவமனையில் சிகிச்சை பெற்று பயனடைந் திருக்கிறார்.

ஒன்றரை இலட்சம் பேர் அல்ல; அத்தனை குடும் பங்கள் காக்கப்பட்டுள்ளன என்ற நெகிழ்வோடு இதனைப் பகிர்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் தம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *