1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை : அமைச்சர் தகவல்

1 Min Read

அரசியல்

சென்னை மார்ச் 17  தமிழ்நாட்டில்  1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வு நடத் தும் திட்டம் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தற் போது, பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி 20 தேதி முடிவடைய உள்ளது. இது முடிந்த பின்னர் 9ஆ-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும். இதன்படி ஏப்ரல் 24 முதல் இந்தத் தேர்வுகள் தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 9ஆ-ம் வகுப்பு வரையிலான தேர்வுகளை ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், “1ஆ-ம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியிலேயே தேர்வுகள் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *