‘‘புது தமிழ்நாடு மாடல் மெஷின்’’ குட்கா கறைகளைக் கூட நீக்கும் கனிமொழி எம்பி எக்ஸ்தள பதிவு

2 Min Read

சென்னை, ஜூலை 3- புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கறைகளைக் கூட நீக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஏராளமானோர் நேற்று (2.7.2026) தவெகவில் இணைந்தனர். இந்நிலையில், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

வடக்கில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற ‘வாஷிங்மெஷின்’ ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். இந்த புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கறைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே… உண்மையா? இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வலியுறுத்தி

மீண்டும் போராட்டத்துக்கு தயாராகும் ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பு

சென்னை, ஜூலை 3- அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் என்பதை வலியுறுத்தி, மீண்டும் போராட்டக் களத்துக்கு தயாராவதாக, ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2003 ஏப். 1-ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமும், ஓய்வூதிய காலப் பலன்களும் அறவே மறுக்கப்பட்டுள்ளது. பணியாளர் பகுப்பாய்வுக் குழு என்ற ஒன்று அமைக்கப்பட்டு பணியிடங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் நடவடிக்கை என்பது, முன்பு எவ்வாறு வேலைநியமன தடைச் சட்டம் மூலம் அமல்படுத்தப்பட்டதோ, அதேபோல், வேறு வடிவில் அரசு பணியில் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பை முற்றிலுமாக பறிக்கக்கூடிய நிலையை உருவாக்கக் கூடிய திசை வழியை நோக்கி அரசு நிர்வாகம் சென்று கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள அய்ஏஎஸ், அய்பிஎஸ், நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஊதிய மாற்ற நிலுவை தொகை, நிதி ஆதாரம் இல்லை என்ற காரணத்தால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மறுக்கப்படுகிறது. அந்த வகையில், ஏறக்குறைய 2003 போன்ற ஒரு சூழல்தான் தற்போதும் உள்ளது. நமது உரிமைகளை ஒன்று பட்டு கேட்க தவறினால், என்றுமே அவற்றை பெற முடியாது.

பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அனைவரும் பெற வேண்டுமானால், ஒன்றுபட்ட சக்தியாக களத்தில் நிற்க வேண்டும். 2003 ஏப்.1-ஆம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த நம் இளையோருக்கு ஓய்வூதியத்தை உத்திரவாதப்படுத்த கூடிய ஒரு ஜனநாயக அறவழி போராட்ட களத்தில் இளைய தலைமுறையோடு இணைந்து மீண்டும் களம் காண்போம். அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் என்ற புதிய சகாப்தத்தை படைக்கத் தயாராவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *