பிஜேபியின் அலங்கோலம் இரவில் நீக்கம் காலையில் சேர்ப்பு

1 Min Read

சென்னை, மார்ச் 18- எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த விவகாரத்தில் பா.ஜனதா நிர்வாகி இரவில் நீக்கப் பட்டு, காலையில் கட்சியில் சேர்க்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பா.ஜனதா மாநில தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார், மாநில செயலாளர் திலீப் கண்ணன் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். கூட்டணி தர்மத்தை மீறி செயல்பட்டதாக கூறி, கோவில் பட்டி இனாம் மணியாச்சி சந்திப்பில் கடந்த 7ஆம் தேதி பா.ஜ.க. இளைஞர் அணி வடக்கு மாவட்ட தலைவர் தினேஷ் ரோடி தலைமையில் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னக்கேசவன் 15.3.2023 அன்று இரவு வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்ட தாலும், கட்சியின் நிலைப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்படுவதாலும் தினேஷ் ரோடி தற்போது வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்துக்கு விலக்கி வைக்கப்படுகிறார் என்று தெரிவிக் கப்பட்டது. 

இந்த நிலையில் 16.3.2023 அன்று காலையில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளரும், கன்னியாகுமரி பெருங் கோட்ட பொறுப்பாளருமான பொன் பாலகணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தினேஷ் ரோடி 6 மாத காலம் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னக்கேசவன் வெளியிட்ட அறிவிப்பானது உடனடியாக ரத்து செய்யப் படுகிறது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பொறுப்பில் தினேஷ் ரோடி தொடர்ந்து செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *