காசோலை மோசடி பா.ஜ.க. நிர்வாகிக்கு 2 ஆண்டு சிறை

1 Min Read

 தூத்துக்குடி, மார்ச் 18- தூத்துக்குடியில் காசோலை மோசடி வழக்கில் பா.ஜ மாநில பொருளாதார பிரிவு செயலாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் பிரபு. தூத்துக்குடி மாநகராட்சி மேனாள் உறுப்பினரான இவர், பாஜக மாநில பொருளாதார பிரிவு செயலாளராக இருந்து வருகிறார். தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் பரமசிவன். பால் வியாபாரியான இவரும், பிரபுவும்  நண்பர்கள். இதனால் பிரபு கடந்த 12.10.2008 அன்று பரமசிவனிடம் இருந்து கடனாக ரூ.5 லட்சம் பெற்றுள்ளார். இதற்காக தலா ரூ.2.50 லட்சத்துக்கு 2 காசோலைகளை பிரபு கொடுத்துள்ளார். இந்த 2 காசோலைகளையும் பரமசிவன் 16.12.2008 அன்று பணம் பெறுவதற்காக  வங்கியில் கொடுத்துள்ளார். ஆனால், பிரபு கணக்கில் போதுமான பணம் இல்லாததால் இரு காசோலைகளும் திரும்பி வந்து விட்டன.

இதுதொடர்பாக பரமசிவன், பிரபுவிடம் தகவல் தெரிவித்து தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால், குறித்த காலத்தில் பணத்தை திருப்பி கொடுக்க பிரபு தவறிவிட்டார். இதையடுத்து பரமசிவன் கடந்த 11.05.2009 அன்று காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஜலதி, விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட பிரபுவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் மனுதாரரான பரமசிவனுக்கு ரூ.10 லட்சத்தை இழப்பீடாக ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும், தவறும் பட்சத்தில் மேலும் 2 மாதங்கள் சிறை தண்டனையை பிரபு அனுப விக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *