கடவுள் சக்தி இவ்வளவுதான்!

1 Min Read

கோவிலுக்குச் செல்லும் வழியில் ஆற்றைக் கடக்கும்போது 

நீரில் மூழ்கி 3 பக்தர்கள் உயிரிழப்பு – 5 பேரைக் காணவில்லை

மொரேனா, மார்ச் 19 மத்தியப் பிரதேசத்தில் கோவி லுக்குச் செல்லும் வழியில் ஆற்றைக் கடக்கும்போது நீரில் மூழ்கி 3 பக்தர்கள் உயிரிழந்தனர்.  

மத்தியப் பிரதேசம் மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சில்வாடா கிராமத்தைச் சேர்ந்த 17 பேர் கொண்ட பக்தர்கள் குழு ஒன்று ராஜஸ்தான் மாநிலம் கரெவுலி மாவட்டத்தில் உள்ள கைலா தேவி மந்திர் கோவில் திருவிழாவிற்குச் சென்று கொண்டிருந்தனர். அந்த குழுவினர் மொரேனா மாவட்டத்தில் உள்ள சம்பல் ஆற்றில் தண்ணீர் குறைவாக இருப்பதாக நினைத்து அதை நடந்து கடக்க முயன்றனர். அப்போது அவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் பத்து பேர் பாதுகாப்பாக நீந்திச் சென்று கரையேறினர். இரண்டு பேர் நீரில் மூழ்கி உயி ரிழந்தனர். 5 பேர் காணாமல் போயுள்ளனர். 

மீட்பு படையினர் அந்த குழுவைச் சேர்ந்த இருவரின் உடல்கள் உட்பட 3 உடல்களை மீட்டுள்ளனர். மற்றொரு உடலில் முகம் சிதைந்திருந்தது. முதலைகள் கடித்திருக்கலாம் என்றும் அந்த உடலை அடையாளம் காண முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நபர் அவர்களின் குழுவைச் சேர்ந்தவர் இல்லை என்று உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் காணாமல் போன 5 பேரை காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *