குற்றங்களை கட்டுப்படுத்த 5 புதிய திட்டங்கள் சென்னை காவல் துறை நடவடிக்கை

1 Min Read

சென்னை மார்ச் 19  சென்னையில் குற்றச் நிகழ்வுகளை கட்டுப்படுத்த 5 புதிய திட்டங்கள் விரைவில் அமல்படுத்த உள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எழும்பூரில் செய்தியாளர்களுடன் நேற்று (18.3.2023) கலந்துரையாடினார். பின்னர், கூடுதல் ஆணையர் லோக நாதன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: நாட்டில் முதல்முறை யாக சென்னை அடையாறு பெசன்ட் அவென் யூவில் ‘ட்ரோன் காவல் அலகு’ என்ற திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

ஏஎன்பிஆர் கேமராக்களுடன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட 9 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவை தரையில் இருந்து 5 முதல் 10 கி.மீ. தொலைவுக்குப் பறக்ககூடியவை. இதன் மூலம் திருவிழாக்கள், பொதுக்கூட்டங்கள் கண்காணிக்கப்பட்டு, கூட்டத்தில் நடமாடும் பழைய குற்றவாளிகளை துல்லியமாக அடையாளம் காண முடியும்.

இதேபோல, சைபர் குற்றவாளிகளைக் கண்ட றித்து, தக்கநடவடிக்கை எடுக்கும் வகையில் இணையவழி சைபர் குற்ற எச்சரிக்கை செயலி உருவாக்கப்பட உள்ளது. பருந்து செயலியை உருவாக்கி, பழைய குற்றவாளிகள், ரவுடிகளின் பதிவை டிஜிட்டல் மயமாக்க உத்தேசிக்கப்பட்டுள் ளது. திருட்டு வாகனத்தை அடையாளம் காணும் வகையில்,ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு (அய்விஎம்ஆர்) செயலி உருவாக்கப் பட்டுள்ளது.சென்னையில் போக்குவரத்து நெரி சலைக் கண்காணித்து, சம்பந்தப்பட்ட அதிகா ரிக்கு அலைபேசியில் தகவல் தெரிவிக்கும் அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. மேலும், கடற்கரையில் ரோந்து செல்ல ‘பீச் பகி’ எனப் படும், அனைத்து நிலப் பரப்பிலும் செல்லும் 

4 வாகனங்கள் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூடுதல் ஆணையர் லோகநாதன் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *