அரசு பொது மருத்துவமனையில் 2 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டமைப்புகள்!

1 Min Read

சென்னை, நவ.26  சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.2  கோடி செலவில் பல்வேறு புதிய மருத்துவ கட்டமைப்புகள் நேற்று (25.11.2023) திறக்கப்பட்டன. 

இதை திறந்து வைத்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் 3,172 படுக்கை வசதிகள் இருக்கின்றன. உள் நோயாளிகளுக்கு உயர் தர உணவு வழங்கும் விதமாக ரூ.81 லட்சம் செலவில் நவீன சமையலறை திறக்கப் பட்டுள்ளது. இதே போல பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் ஓய்வு எடுப்பதற்கும் உணவு சாப்பிடுவதற்கும் 6 ஓய்வு அறைகள் ரூ.18 லட்சம் செலவில் அமைக்கப் பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவ மனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்களில் புதிய படுக்கை விரிப்புகள் இருக்க வேண்டு மென்ற நோக்கில் ரூ.65 லட்சம் செலவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணங்கள் என வாரத்தில் நாளொன்றுக்கு 6 வண்ணங்களில் புதிய படுக்கை விரிப் புகள் பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப் பட்டன.  இதுபோல, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு புதிய வண்ண படுக்கை விரிப்புகள் படிப்படியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். 

உயர் சிறப்புமருத்துவ இடங்களுக்கு 50 சதவீதம் இடங்களை அனுமதிக்க ஒன்றிய அரசுக்கு ஒரு கடிதத்தை கொடுத்திருந்தோம். அதை ஏற்று ஒன்றிய அரசு 407 இடங்களுக்கு 204 இடங்களை தமிழ்நாடு அரசு நிரப்பு வதற்கான அனுமதிக்கப்பட்டது. மேலும், உயர் சிறப்பு மருத்துவ பட்டமேற்படிப்புக்கான இடங்கள் காலியாக இருந்தன. மேலும், எம்டி, எம்எஸ் முதுகலை படிப்புகளுக்கு 74 இடங்களும், எம்.டி.எஸ் பல் மருத்துவ படிப்புகளுக்கு 48 இடங்களும் டிஎன்பி படிப்புக்கு 11 இடங்களும் காலியாக இருந்தன. எனவே, இந்த மருத்துவ படிப்பு இடங்களை நிரப்பிக் கொள்வதற்கு ஒரு கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *