ராகுலை பேசவிடாமல் தடுப்பது நாகரிகமற்றது கே.எஸ்.அழகிரி

1 Min Read

அரசியல்

சென்னை, மார்ச் 19 கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள தனியார் பள்ளியில், காங்கிரஸ் தலைவர் களான காமராசர், கக்கன் ஆகியோரது சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று (18.3.2023) நடைபெற்றது. 

 இதில் கே.எஸ்.அழகிரி காமராசர் சிலையை திறந்து வைத்து பேசியதாவது: காமராசர் தனது வாழ்க்கையில், அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு வழங்க இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவதற்காக, அப்போதைய பிரதமர் நேருவிடம் கோரிக்கை வைத்தார். அதேபோல் கக்கனும் அமைச்சர்களில் சிறந்து விளங்கினார். நாடாளுமன்றத்தில், ராகுல்காந்தியை பேச விடாமல் தடுப்பது நாகரிகமற்றது. இதுவரை யாரும் ராகுலை நாடாளுமன்றத்தில் பேசவிடாமல் தடுத்தது இல்லை. ஆனால், பாஜ அரசு அதனை செய்து வருகிறது. எந்த தவறும் செய்யாத ராகுல்காந்தி ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.

சொத்து வரி செலுத்தாத 5 லட்சம் பேரிடம் வசூல் செய்ய   நடவடிக்கை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *