தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நிட்டி ஆயோக் தலைவர், குழுவினர் சந்திப்பு..!!

1 Min Read

சென்னை,மார்ச்21- நிட்டி ஆயோக் துணைத் தலைவர் மற்றும் நிட்டி ஆயோக் குழுவினர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். தமிழ்நாடு முதல மைச் சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில், நிட்டி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் சுமன் குமார் பெர்ரி மற்றும் உயர் அலுவலர்கள் கொண்ட குழு சந்தித்து, அந்த அமைப்பின் முக்கிய முயற்சிகளான நீடித்த வளர்ச்சி இலக்குகள் மற்றும் முன்னேற விழையும் மாவட் டங்கள் திட்டம் ஆகியன குறித்து  கலந்தாலோசித்தனர்.

இச்சந்திப்பின்போது, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலை மைச் செயலாளர் வெ.இறையன்பு, மாநிலத் திட்டக்குழு வின் துணைத்தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம்,  திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை சிறப்புச் செயலாளர் த.சு.ராஜ்சேகர், மாநிலத் திட்டக்குழுவின் உறுப்பினர் செயலர் (மு.கூ.பொ) சுதா, நிட்டி ஆயோக் ஆலோசகர் பார்த்தசாரதி ரெட்டி,  துணைத் தலைவரின் தனிச்செயலர் ஏ. முத்துகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *