மேகாலயாவில் ஆளுநர் ஹிந்தியில் உரையாற்றுவதா? எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

1 Min Read

அரசியல்

ஷில்லாங், மார்ச் 21 மேகால யாவில் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (20.3.2023)தொடங்கியது. ஆளுநர் பாகு சவுகான் கூட்டத் தொடரை தொடங்கி வைத்துப் பேசினார். 

கடந்த பிப்ரவரியில் ஆளுநர் பொறுப்பேற்ற அவரது கன்னி உரை இதுவாகும். அங்கு பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) ஆளும்கட்சியாக உள்ளது. கான்ராட் சங்மா கடந்த 9-ஆம் தேதி 2ஆ-வது முறையாக முதலமைச்சராக பொறுப் பேற்று உள்ளார். மக்கள் குரல் கட்சி (வி.பி.பி.)  எதிர் கட்சிகளில் ஒன்றாக செயல்படு கிறது. அதற்கு 4 சட்டமன்ற உறுப் பினர்கள் உள்ளனர். நேற்று, ஆளுநர் சவுகான் சட்ட சபையில் ஹிந்தியில் உரையாற் றத் தொடங்கியதும் வி.பி.பி. கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குறுக்கிட்டு, ஆளுநர் ஆங்கி லத்தில் உரையாற்ற வேண்டும் என்று சட்டமன்றத் தலைவரி டம் முறையிட்டனர். அதற்கு சட்டமன்ற தலைவர் சங்மா எதிர்க்கட்சியினர் கோரிக்கையை ஏற்காததால், அவர்கள் வெளி நடப்பு செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *