புதுமாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்ட காட்டுமிராண்டித்தனம்
காவேரிப்பட்டணம், மார்ச் 22- கிருட்டி னகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவருடைய மகன் ஜெகன் (வயது 28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரும், கிருட்டி னகிரி மாவட்டம் முழுக்கான் கொட் டாய் கிராமத்தை சேர்ந்த சங்கரின் மகள் சரண்யா (21) என்பவரும் காத லித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவ ரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் பெண்ணின் பெற் றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவசரஅவசரமாக மகளுக்கு வரன் பார்த்து திருமண ஏற்பாடு செய்தனர்.
இந்த நிலையில் ஜெகன், சரண் யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் சரண்யாவின் குடும்பத்தினர் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தனர். அதோடு ஜெகனை அவரு டைய மாமனார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கொன்றுவிட திட்ட மிட்டனர்.
நேற்று மதியம் 2 மணி அளவில் புதுமாப்பிள்ளை ஜெகன் மோட்டார் சைக்கிளில் தருமபுரி-கிருட்டினகிரி சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர் அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்கள் ஜெகனை வழி மறித்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளினர். பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவா ளால் சரமாரியாக ஜெகனை வெட்டி னர். மேலும் அரிவாளால் அவரின் கழுத்தை அறுத்தனர். இதில் நிகழ்வு இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ஜெகன் பரிதாபமாக இறந்தார்.
அவரை கொலை செய்ததும் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். ஜெகன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட் டதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அவர்கள் காவேரிப்பட் டணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே ஜெகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் ஜெகனின் மரணத்திற்கு நீதி கேட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் ஜெகனின் குடும்பத்தினர், உறவினர்கள் அங்கு திரண்டனர்.
கிருட்டினகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர், துணை காவல்துறை கண்காணிப்பாளர் தமிழரசி மற்றும் காவல்துறையினர் அங்கு விரைந்தனர். அவர்கள் கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். குற்றவா ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கி ருந்து கலைந்து சென்றனர்.
தொடர்ந்து காவல்துறையினர் ஜெகனின் உடலை கைப்பற்றி உடற் கூராய்வுக்காக கிருட்டினகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இந்த ஆணவப் படுகொலை தொடர்பாக ஜெக னின் மாமனார் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் மீது காவேரிப் பட்டணம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் காவல்துறை தேடி வந்த மாமனார் சங்கர் (வயது45) நேற்று இரவு கிருட்டினகிரி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் சங்கரை சேலம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி சேலம் சிறையில் அடைப் பதற்கான நடவடிக்கைகளை காவல் துறையினர் எடுத்தனர்.
சங்கர் நேரடியாக நீதிமன்றத்தில் சரண் அடைந்ததால், கொலை குறித்த தகவல்களை சேகரிக்க சங்கரை காவ லில் எடுத்து விசாரணை நடத்த காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். அதற்காக இன்னும் ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இதற்கிடையே கொலை குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணை யில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-
சங்கர், தன்னுடைய மகள் சரண்யா ஜெகனை காதலிப்பதை அறிந்து அவர் இருவரையும் கண்டித்துள்ளார்.
இதற்கிடையே சங்கரின் மகள் வீட்டை விட்டு வெளியேறி ஜெகனை திருமணம் செய்து கொண்டார். இது சங்கருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்ப டுத்தியது. உறவினர்கள் மத்தியில் கவுரவ பிரச்சினை ஏற்பட்டது.
எனவே ஜெகனை தீர்த்துக்கட்ட உறவினர்களுடன் சேர்ந்து திட்ட மிட்டார். அதன்படி ஜெகன் தனியாக சென்ற போது அவரை தீர்த்துக்கட்டியது காவல்துறை விசாரணையில் தெரிய வந்து உள்ளது. மாமனார் சங்கர் சரண் அடைந்துள்ள நிலையில் உறவினர்கள் அருள், கோவிந்தராஜ், திம்மராயன் ஆகிய 3 பேரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.