தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு

1 Min Read

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

அரசியல்

சென்னை,மார்ச் 22- தமிழ் நாட்டில் விளை யாட்டு நகரம் அமைய உள்ள இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள் ளார். வரலாற்று சிறப்பு மிக்க விக்டோரியா பொது அரங்கம் சிங்கார சென்னை 2.ளி திட்டத்தின் கீழ் தொன்மை மாறாமல் மறுசீரமைக்கப்பட உள்ளது.

இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா வில் அமைச்சர்கள் கே. என்.நேரு உடன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியா ளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி நேரு மைதானத்தை மறு சீரமைக்க நிதிநிலை அறிக்கையில் ரூ.25 கோடி  ஒதுக்கப்பட்டுள் ளதாக கூறினார்.

நேரு விளையாட்டு அரங்கின் விளக்குகளை மாற்ற ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டு விட்டதாகவும் உதயநிதி தெரிவித்தார். விளையாட்டு நகரம் அமைக்க 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப் பதாக கூறிய அவர் இதில் விரைவில் ஒரு இடம் உறுதி செய்யப் பட்டு பணிகள் தொடங்கப் படும் என்றும் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *