“ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இயற்ற மாநில அரசுக்கு உரிமை உண்டு!” நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு விளக்கம்

1 Min Read

அரசியல்

புதுடில்லி,மார்ச்23- ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசு களுக்கு உண்டு என ஒன்றிய அரசு விளக்கமளித் திருக்கிறது. 

சேலம் மக்களவை திமுக உறுப்பினர் பார்த்திபன் மக்களவையில் இது தொடர்பாக கேள்வியெ ழுப்பினார். 

ஒன்றிய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் எழுத் துப்பூர்வ அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

பந்தயம் மற்றும் சூதாட்டம் ஆகிய இரண்டுமே அரசமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் கீழ் வருகின்றன.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட் டங்களை தடுப்பதற் குரிய சட்டங்களை இயற்றுவ தற்கும், அவற்றை தங்களது வரம்பிற்குள் கொண்டு வருவ தற்கும், மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.

ஏற்கெனவே சில மாநி லங்களில் இதுபோன்ற சட் டங்கள் இருந்து வரு கின்றன. திறமை அடிப்படையிலான விளையாட்டு, வாய்ப்பு மற்றும் ஏதோ வெற்றி வாய்ப்பு அடிப்படையிலான விளை யாட்டு ஆகியவற்றுக்கான வேறுபாடுகள் குறித்து உச்ச நீதிமன்றம் வகைப்படுத்தி உள்ளது.

திறமை சார்ந்த விளையாட் டுகளில் வெற்றி பெறுவதற்கு ஓரளவு திறன் தேவைப்படும். 

ஆனால், பெரும்பாலும் வாய்ப்பு அடிப்படையிலான விளையாட்டு களை ‘சூதாட் டம்’ என்று தான் இந்திய சட்டங்கள் கருதுகின்றன. இவ் வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *