ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 23.3.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* நீதிபதிகள் நியமனங்களில் ஒன்றிய அரசு தாமதம் ஏற்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* வைக்கம் நூற்றாண்டு விழாவினை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* திப்பு சுல்தானை ஒக்கலிகா ஜாதியைச் சேர்ந்த உரி கவுடா, நஞ்ச கவுடா கொன்றார்கள் என ஆதாரம் இல்லாமல் புதிய கதையை விட வேண்டாம் என பாஜகவினருக்கு நிர்மலானந்தா சுவாமி அறிவுரை.

தி இந்து:

* சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஜான் சத்யனை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

2024 மக்களவைத் தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கும் நிலையில், உத்தரப் பிரதேச அரசியலின் இரு துருவங்களான சமாஜ்வாதி, பாஜக ஆகிய இரு கட்சிகளும், 80 இடங்களின் முடிவைத் தீர்மானிக்கும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின (ஓபிசி) வாக்காளர்களை மீண்டும் ஒருமுறை கவரத் தொடங்கியுள்ளன.

தி டெலிகிராப்:

* ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ சில ஓய்வுபெற்ற நீதிபதிகளை “இந்தியாவுக்கு எதிரானவர்கள்” என்று கூறியதற்கு டில்லி உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ரேகா ஷர்மா கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *